T20 உலகக்கோப்பை : இறுதிப்போட்டி இன்று

இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடைபெறவுள்ளது.

இப்போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், போட்டி மழையால் தடைபடலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு ஆட்டம் தடைபட்டால் நாளை போட்டி நடைபெறும், அதுவும் மழை குறுக்கிட்டால் இரு அணிகளும் இணை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.

இங்கிலாந்தும் பாகிஸ்தானும் இதற்கு முன்பு 1992 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் போட்டியிட்டன.

அந்த போட்டியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி ஒருநாள் உலகக் கோப்பையை வென்றமை குறிப்பிடத்தக்கது.