![](https://minnal24.com/wp-content/uploads/2024/05/IMG-20240509-WA0171.jpg)
சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 195 மரக் குற்றிகள் மீட்பு
-யாழ் நிருபர்-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் வெட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மருத மரக் குற்றிகள் நேற்று முன்தினம் புதன் கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டன.
இதன்போது பல்வேறு அளவுகளில் வெட்டப்பட்டு மறைத்து வைத்திருந்த 195 மரக்குற்றிகள் மீட்கப்பட்டன.
அப்பகுதி பொதுமக்கள், வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சி.ஏ.தனபாலவுக்கு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த மரக்கடத்தல் பொலிஸார் அல்லது வேறு அரசு அதிகாரிகளின் துணையுடன் செய்யப்பட்டதா என்பது குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எதிரான சட்டவிரோத வியாபாரிகளை கண்டறியும் விசேட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தலை தடுத்து எதிர்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது முதன்மையான பொறுப்பு எனவும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்