தினசரி மின்வெட்டு இல்லை

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் தினசரி மின்வெட்டை மேற்கொள்ளக் கூடாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இதேவேளை, உயர்தரப் பரீட்சை காலத்தில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கு 5 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், உரிய திகதிகளில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.