உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் குரோஷியாவை 2-1 என்ற கோல் கணக்கில் போர்த்துகல் அணி வீழ்த்தியது.
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது வௌியேற்றும் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடந்து வருகின்றன.
இதில், அதிகாலை 4.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போர்த்துகல் மற்றும் குரோஷியா அணிகள் மோதின.
கனடாவின் டொரண்டோ மைதானத்தில் நடந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர்.
எனினும், கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால், போட்டியின் முதல் பாதியில் 0-0 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
2-வது பாதியில் இரு அணிகளும் முதல் கோலுக்காக கடுமையாக போராடின.
அப்போது ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெரிசிச் அணியின் முதல் கோலை பதிவு செய்தார்.
இதையடுத்து தாக்குதல் ஆட்டத்தை போர்த்துகல் தீவிரப்படுத்திய நிலையில், ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அதனை ரொனால்டோ கோலாக மாற்றி சமனிலை ஏற்படுத்தினார்.
இதையடுத்து 2-வது கோலுக்காக இரு அணிகளும் கடுமையாக போராடினாலும் அதன்பின் எந்த கோலும் பதிவாகவில்லை.
90 நிமிடங்கள் முடிந்த நிலையில் இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால் கூடுதலாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
அப்போது ஆட்டத்தின் 90+4 நிமிடத்தில் போர்த்துகல் வீரர் கொண்ட்சாலோ ராமோஸ் அபாரமான கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.
இதையடுத்து குரோஷியாவால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் போர்த்துகல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 16 அணிகளைக் கொண்ட அடுத்த சுற்றுக்கு போர்த்துகல் முன்னேறியது.
போர்த்துகல் அணிக்கு எதிராக தோல்வியடைந்த குரோஷியா 2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இருந்து வெளியேறியது.