பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பொதுசன நூலகத்திற்கு விஜயம்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு நேற்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் அவரை வரவேற்றதோடு, பொது நூலகத்தின் சிறப்புகள் மற்றும் வரலாற்று ஆவணங்களை காண்பித்தார்.

அத்துடன் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பொது நூலகத்தின் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.