பாகிஸ்தான் பஸ் விபத்தில் 41பேர் உடல் கருகி பலி

பாகிஸ்தானின் தெற்கு நகரமான பெலாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர்.

குவெட்டாவிலிருந்து கராச்சிக்கு பயணித்த இந்த பேருந்து அதிகாலை 4 மணியளவில் பாலத்தின் தூணில் அதிவேகமாக மோதியதாக பேலா உதவி ஆணையர் ஹம்சா அஞ்சும் தெரிவித்துள்ளார்.

குறித்த பேருந்தில் 48 பயணிகள் இருந்துள்ளனர். இதுவரை 39 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் காயமடைந்த மூன்று பேர் ஆபத்தான நிலையில் கராச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு முற்றாக எரிந்துள்ள நிலையில் டிஎன்ஏ பரிசோதனைக்காக கராச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.