-மஸ்கெலியா நிருபர்-
பாரவூர்தியுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து, கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்ட தவலந்தன்னை பகுதியில் இருந்து பூண்டுலோயா நோக்கி பயணித்த பாரவூர்தியுடன், பூண்டுலோயா பகுதியில் இருந்து தவலந்தன்னை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கேந்திர விகாரை பகுதியில் வைத்து மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்களின் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பாரவூர்தியின் சாரதியை கைது செய்த பூண்டுலோயா பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.