ஹெரோயினுடன் 27 வயது இளைஞன் கைது

-யாழ் நிருபர்-

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறை பகுதியில் 10 கிராம் 200 மில்லிக்கிராம் உயிர்க்கொல்லி ஹெரோயினுடன் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த இளைஞன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.