பதவி விலகினார் முஜிபுர் ரஹ்மான்

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை அவர் இதனை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

நாளை  சனிக்கிழமையுடன் வேட்புமனு தாக்கலுக்கான கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கட்சியின் செயற்குழு எடுத்த ஏகமானதான முடிவின் பிரகாரம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில்,  கொழும்பு மாநகர சபைக்காக போட்டியிடவுள்ளதால்,  நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக  ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அறிவித்தார்.

2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றுக்கு தெரிவான தனக்கு வாக்களித்த 87,000 பேருக்கும், ஒத்துழைப்பு வழங்கிய நாடாளுமன்ற பணிக்குழாமினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

முஜிபுர் ரஹ்மானின் பதவி விலகலால் ஏற்படும் வெற்றிடத்துக்கு முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டிற்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.