
கையடக்க தொலைபேசிகளின் விலை நாளை முதல் 35 வீதத்தால் அதிகரிப்பு
புதிய வற் வரி அமுல்படுத்தப்பட்டதன் மூலம் அனைத்து வகையான கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனை விலை நாளை திங்கட்கிழமை முதல் 35 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என கையடக்க தொலைபேசி சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை சங்கம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் வற் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சம்பத் செனரத் தெரிவித்துள்ளார்.
இந்த விலை அதிகரிப்பினால் நாளை முதல் 100,000 ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் 135,000 விலையில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.