நான் ஒருபோதும் மக்களை விட்டு ஓடியதில்லை – மஹிந்த ராஜபக்ஷ

தாம் ஒருபோதும் மக்களை விட்டு ஓடியதில்லை, என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,  தாம் ஒருபோதும் மக்களை விட்டு ஓடியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களுக்கு அமைய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதியமைச்சர் என்ற வகையில் வரவு செலவுத் திட்டத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கப் போவதாக குறிப்பிட்டார்.

அத்தகைய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு நாம் செய்ய வேண்டிய பல நீண்ட கால மற்றும் குறுகிய கால செயற்பாடுகள் உள்ளன.

இவை அனைத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் செயல்முறையின் யதார்த்தங்கள், அத்தகைய மூலோபாயத் திட்டத்தில் நாம் நகர்ந்தால் மட்டுமே நேர்மறையான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

எனவே நாம் அனைவரும் திருத்தங்களுக்கு உட்பட்டு அதை ஆதரிப்பது முக்கியம், என அவர் மேலும் தெரிவித்தார்.