கிளிநொச்சியில் வாகனத்தை கொள்ளையிட முயற்சித்து மூவர் கைது

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபளை சந்திக்கு அருகில் கெப் வண்டியொன்றை நேற்று வெள்ளிக்கிழமை கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்படும் 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் வடூhகனத்தை பின்தொடா சந்தேகநபர்கள் வீதியை மறித்து சாரதியையும் பயணிகளையும் கெப் வண்டியில் இருந்து வெளியே இழுத்து கொள்ளையடிப்பதற்காக முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனையிறவுச் சந்தியில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இச்சம்பவம் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, தப்பியோடிய கொள்ளையர்களை தடுத்து நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். எனினும் சந்தேகநபர்கள் பொலிஸாரின் உத்தரவை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் வாகனங்களை துரத்திச் சென்ற பொலிஸார் 24, 30 மற்றும் 34 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாங்குளம், பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்