கஞ்சிப்பானை இம்ரானின் பிணையாளர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு
கஞ்சிப்பானை இம்ரான் எனப்படும் நஜீம் மொஹமட் இம்ரானின் பிணையாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் முன்னணியில் இருக்கும் கஞ்சிப்பானை இம்ரான், இந்தியாவுக்கு தப்பிச் சென்றுஇ அங்கிருந்து பாகிஸ்தானுக்குள் நுழையத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கஞ்சிப்பானை இம்ரானை பிணையில் விடுவிக்க அவரின் தாய், சகோதரர் மற்றும் மற்றொரு நபர் பிணையாளர்களாக கையொப்பமிட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின்படி, கஞ்சிப்பானை இம்ரான் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மாளிகாவத்தை பொலிஸில் ஆஜராக வேண்டும் என்றும், அவர் ஆஜராகத் தவறியதால், பொலிஸார் நீதிமன்றில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இம்ரானின் தாய், சகோதரர் மற்றும் பிணையாளர்களாக பட்டியலிடப்பட்டுள்ள மற்றொரு நபரையும் 2023 மார்ச் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.