பிரதியதிபரை புதிய அதிபராக நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்

-கல்முனை நிருபர்-

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய அதிபர் விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய அதிபரை நியமிக்க வேண்டாம் என்றும், பாடசாலை பிரதியதிபரை புதிய அதிபராக நியமிக்குமாறும் கோரி பெற்றோர்கள் சிலர் சுலோகங்களை ஏந்திக்கொண்டு பாடசாலை முன்றலில் இன்று வியாழக்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.