பாலைவன பண்ணை ஒன்றின் சிக்கியிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட இலங்கை இளைஞர்கள் நாட்டை வந்தடைந்தனர்

குவைத்தில்  எல்லையை அண்மித்த பாலைவனத்தில் பண்ணை ஒன்றின் சிக்கியிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட மேலும் ஆறு இலங்கை இளைஞர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை ஜசீரா விமானத்தில் கட்டுநாயக்கவிற்கு வந்த இவர்கள் திருகோணமலை மற்றும் கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கிண்ணியா பிரதேசத்தில் உள்ள தரகர் ஒருவர் ஊடாக இந்தக் குழுவினர் குவைத் நோக்கிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.