மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஆற்றில் மாயம்

-யாழ் நிருபர்-

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லை பாலத்தின் மீது அமர்ந்திருந்து தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்து இளைஞன் ஒருவர் தவறி ஆற்றில் வீழ்ந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

புத்தூர் – சுலைமதி பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு பாலத்தில் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது அவருடன் சேர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்து இளைஞர்களை, மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.