50 லீற்றர் கசிப்புடன் இளைஞன் கைது

-யாழ் நிருபர்-

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரவாணி – வாதரவத்தை பகுதியில் 50 லீற்றர் கசிப்புடன் அதே பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் உப பொலிஸ் பரிசோதகர் சதுசங்கவின் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மீட்கப்பட்ட கசிப்புடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.