449 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

 

-யாழ் நிருபர்-

449 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் இன்று புதன்கிழமை அதிகாலை  1.00  மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

குறித்த சந்தேகநபர்கள் இந்தியாவில் இருந்து கஞ்சாவினை கடல்மார்க்கமாக கடத்தி வந்தவேளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளறனர்.

கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 449 கிலோ கஞ்சா மற்றும் படகு என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் அல்லைப்பிட்டி மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் அவர்கள் சான்றுப் பொருட்களுடன் நெடுந்தீவு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்படவுள்ளனர்.