விபத்தில் இளைஞன் பலி

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, மாவிட்டபுரம் பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பட்டா வாகனமும் துவிச்சக்கர வண்டியும் மோதியமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இச்சம்பவத்தில் மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ் (வயது.27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பட்டா வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக காங்கேசன்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.