Last updated on January 4th, 2023 at 06:53 am

யாழில் தஞ்சமடைந்த இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

யாழில் தஞ்சமடைந்த இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தஞ்சம் அடைந்த நான்கு இந்திய மீனவர்களையும் 2023 ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நான்கு இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை நள்ளிரவு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகின் இயந்திர கோளாறு காரணமாக வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் உள்ள கடற்கரையில் தஞ்சமடைந்தனர்.

தஞ்சமடைந்த இந்திய மீனவர்களை மீட்ட வல்வெட்டித்துறை பொலிஸார் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

இதன்போதே,  நீதவான் நீதிமன்றம் நான்கு இந்திய மீனவர்களையும் 2023 ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க