முச்சக்கரவண்டியிலிருந்து பிறந்து 12 நாட்களே ஆன குழந்தை மீட்பு

முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை பகுதியில் உள்ள கோவில் ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்தே இன்று திங்கட்கிழமை காலை குறித்த குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

பிறந்து 12 நாட்களே ஆன குறித்த குழந்தையை தலவாக்கலை பொலிஸார் மீட்டு, லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இன்று அதிகாலை 5.45 மணியளவில் குறித்த முச்சக்கரவண்டிpயிலிருந்து சிசுவின் அழுகுரல் கேட்பதாக கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸாரால் குறித்த சிசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர்  குழந்தைக்கு தலவாக்கலை பொலிஸ் நிலையத்திலுள்ள பெண் கான்ஸ்டபிள் ஒருவரால் தாய்ப்பால் ஊட்டப்பட்டு, லிந்துலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்து 12 நாட்களே ஆகியிருப்பதாகவும், குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகரிலுள்ள CCTV கமராவின் காட்சிகளை அடிப்படையாக வைத்து  குழந்தையை கைவிட்டுச் சென்றவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.