பாதுகாப்பு அதிகாரியை தாக்கி கட்டிவைத்துவிட்டு ATM இயந்திரம் திருட்டு

முகமூடி அணிந்த நான்கு பேர் கம்பளை கண்டி வீதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் (Hatton National Bank) இருந்து ATM இயந்திரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வானில் வந்த திருட்டு குழுவினர் ATM  இயந்திரத்தை அகற்றுவதற்கு முன், வங்கியில் பாதுகாப்பு அதிகாரியை தாக்கி   கட்டிவைத்துவிட்டு ATM  இயந்திரத்தை தூக்கி சென்றுள்ளனர்

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.-

UPDATE

கம்பளை  Hatton National  வங்கியில் நேற்று நள்ளிரவு ATM  இயந்திரத்தை கொள்ளையடிக்க சந்தேகநபர்கள் பயன்படுத்திய வான் பேராதனையில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் வானுக்குள் சாரதியை கட்டிவைத்து வைத்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

விசாரணைகள் தொடர்கின்றன.