இலங்கைக்கு தங்க நகை அணிந்து வருவோருக்கு எச்சரிக்கை

குறிப்பிட்ட அளவை மீறி தங்க நகைகளை அணிந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளார்.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளால் அரசாங்கத்திற்கு மாதாந்தம் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அரச வருமானம் இழக்கப்படுவதாக, இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய,  அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்றார்.

எவ்வாறாயினும், இவ்வாறான நடவடிக்கைகளினால் சாதாரண பயணிகளுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.