க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் சில தினங்களில் ?

2022 (2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் விடைத்தாள்கள் திருத்துவதில் ஏறக்குறைய 3 மாதங்கள் தாமதமாகியமையினால் பெறுபேறுகள் தாமதமாகியுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இதனால் இவ்வருடம் நவம்பரில் நடத்தப்பட வேண்டிய 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது, என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.