மின்சார கட்டணம் : பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய முடிவு

உத்தேச மின்சார கட்டணத்தை விரைவுபடுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணமானது 2009 ஆம் ஆண்டுக்கான மின்சார சட்டத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.