கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா : சிறந்த நூலிற்கான விருது

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் நடாத்திய 2021 ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.

இதன் போது, கிழக்கு மாகாணத்தில் 2020 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் சமூக விஞ்ஞானம் சார் துறைகளில் சிறந்த நூலாக தெரிவு செய்யப்பட்ட “சமகால அரசியல்” எனும் நூலின் ஆசிரியர் ஏ .யோகராசாவிற்கு சிறந்த நூற்பரிசுக்கான விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.