சாரதி அனுமதி அட்டை வழங்கலை மட்டுப்படுத்த நடவடிக்கை

ஒரு நாள் சேவையின் கீழ் தினசரி வழங்கப்படும் சாரதி அனுமதி அட்டைகளின் எண்ணிக்கையை 50 ஆக மட்டுப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உரிமம் அச்சிடுவதற்கு தேவையான கார்டுகள் பற்றாக்குறையால், கடந்த காலங்களில் தற்காலிக சாரதி அனுமதி தாள்களாக சாரதி அனுமதி  பத்திரங்கள் வழங்கப்பட்டது.

இதன்படி, சுமார் 06 இலட்சம் தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு தேவையான அட்டைகள் தற்போது கிடைத்துள்ளதால், தற்காலிகமாக வழங்கப்படும் பத்திரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.