அரச அச்சக திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

மேலதிக நேர கொடுப்பனவுகளை முன்வைத்து அரச அச்சக திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த மாதம் தொடர்பான மேலதிக நேர கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.