-கிளிநொச்சி நிருபர்-
பாடசாலையொன்றில் வகுப்பறையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் பாடசாலை ஒன்றில் இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
இன்று காலை பாடசாலை ஆரம்பிப்பதற்காக ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்கு சென்று பார்த்த போது இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
சம்பவம்தொடர்பாக பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.
சடலமாக காணப்பட்ட இளைஞன் அதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் புஸ்பந்ந்தன் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.