கல்முனை ஆதார வைத்தியசாலையினால் சைக்கிள் சவாரி

-கல்முனை நிருபர்-

கல்முனை ஆதாரவைத்தியசாலையினால் நீரழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு சைக்கிள் சவாரி வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜே.மதன் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள், அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வைத்தியசாலை முன்றலில் இருந்து ஆரம்பமாகிய சைக்கிள் சவாரி கல்முனை நகர் ஊடாக பயணித்து பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் நீரழிவு நோய் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

இங்கு சைக்கிள் சவாரியில் கலந்து கொண்டவர்கள் சைக்கிள் சவாரி, நடை, நீச்சல் போன்றவை சிறந்த உடற்பயிற்சி, நோய்வருமுன் காப்போம், எமது ஆரோக்கியம் அவசியம் போன்ற வாசகங்களை சைக்கிள்களில் காட்சிப்படுத்தியிருந்தனர். அத்துடன் வைத்தியசாலை வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் நீரழிவு தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்கள் ஒலிபரப்பப்பட்டுவந்தது.
குல்முனை ஆதாரவைத்தியசாலையானது பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் பொதுமக்களுக்கான சேவையினை சிறப்பாக வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.