மின்தடை நேரத்தில் கடை உடைத்து திருட்டு

 

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியிலுள்ள தனியார் கடை ஒன்றில், ஆடு 01 மற்றும் 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வாழ்வாதாரத்திற்காக வழக்கப்பட்டகோழி என்பன களவாடப்பட்டுள்ளன.

நேற்று திங்கட்கிழமை இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த வேளையில், இரவு 9 மணி அளவில் வீட்டு உரிமையாளர் அயலில் நிகழ்வுக்கு சென்று 9.30 மணியளவில் வீடு திரும்பிய போது கடை உடைக்கப்பட்டுள்ளது.

அதனை அவதானித்த கடை உரிமையாளர் சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அதனையடுத்து, கிளிநொச்சி பொலிஸார் மற்றும் தருமபுர பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.