நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் முறைப்பாடு

சந்தையில் கொப்பரை விலை உயர்வால் உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் சரியான தரம் குறித்து எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும், தற்போதுள்ள தேங்காய் விலையில் தங்கள் தயாரிப்புகளை தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களுக்கு பாரிய செலவை சுமக்க வேண்டியுள்ளது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக தமது வாடிக்கையாளர்கள் பெருமளவு குறைந்துள்ளதாகவும், தற்போதைய மின்வெட்டு மற்றும் மின்கட்டண அதிகரிப்பு என்பன பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மலையகத்தில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.