மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம்

இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

கடந்த வாரம் ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவையில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும்இ கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணைஇ மேலதிக ஆய்வு செய்து முடிவெடுப்பதற்காக இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.