துணியால் சுற்றி வீதியில் வீசப்பட்ட சிசு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-கன்னியா, சர்தாபுர வீதியில் துணியினால் சுற்றப்பட்ட நிலையில் வீசப்பட்டிருந்த நிலையில் ஆண் சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை, முச்சக்கரவண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வைத்தியசாலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளை  கன்னியா சர்தாபுர வீதியினூடாக பயணித்துக் கொண்டிருந்தபோது வெள்ளைத் துணியினால் சுற்றப்பட்ட நிலையில் வீதியில் பொதி ஒன்று இருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனை அடுத்து குறித்த குடும்பத்தினர் சிசு கிடந்த இடத்துக்கு அருகில் உள்ளவர்களை அழைத்து சிசுவை மீட்டுள்ளனர்.

இதனை அடுத்து குறித்த சிசு தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த உப்புவெளி பொலிஸார் மீட்கப்பட்ட சிசுவை திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த ஆண் சிசு யாருடைய என தெரியாத நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.