நாடு திரும்பினார் பசில் ராஜபக்ஷ

முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் ஒன்றரை மாதங்கள் அமெரிக்காவில் இருந்த அவர் இன்று காலை நாடு திரும்பினார்.

நாட்டின் பொருளாதார சீரழிவுக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் பசில் ராஜபக்ஷ பிரதிவாதிகளில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம், பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு வெளிநாடு செல்ல தடையும் விதித்திருந்தது.

எவ்வாறாயினும், பசில் ராஜபக்ஷ தரப்பில் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்றம், அடுத்த வருடம் ஜனவரி 15 ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து, பசில் ராஜபக்ஷ கடந்த செப்டெம்பர் 9 ஆம் திகதி அமெரிக்கா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது