பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பயணி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கட்டார் நாட்டிலிருந்து வருகை தந்த பயணி ஒருவர் வருகை முனையப்பகுதியில் மயக்கமுற்று கீழே விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
55 வயதுடைய கனடாவை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
அவர் பிட்டகோட்டே பகுதியில் வசிக்கும் உறவினரை பார்வையிடுவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -