விவசாய திணைக்களத்தின் அலட்சியப்போக்கினால் கைவிட்டு போன ஒப்பந்தம்

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மாதாந்தம் 2000 மெட்ரிக் டன் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் விவசாயத் திணைக்களத்தின் அலட்சியப்போக்கினால் நஷ்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி 150 வாழை விவசாயிகளின் தகவல்கள் சீன அரசிடம் கொடுத்து சீனாவுக்கு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வாரத்திற்கு 500 மெட்ரிக் டன் வாழைப்பழங்கள் வீதம் மாதம் ஒன்றுக்கு 2000 மெட்ரிக் டன் வாழைப்பழங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், விவசாய அமைச்சின் சரியான கவனம் செலுத்தப்படாமையால் வாழை ஏற்றுமதியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் எச்.எம்.சுபஹின்கெந்த தெரிவித்துள்ளார்.