நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி மன்ற அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அரச நிறுவனங்களுக்கு தேவையான பாரிய கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சின் செயலாளர் சூரியன் செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.
புதிய சுற்றறிக்கையின்படி, அரச நிறுவனங்களுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டைத் தடுக்க நிறுவனங்களின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .