ஐஸ் மற்றும் கஞ்சாவுடன் எட்டு நபர்கள் கைது

-பதுளை நிருபர்-

 

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை பசறை மற்றும் பசறை 13 ம் கட்டைப் பகுதிகளில் பசறை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போது, 20 வயதுடைய ஒருவரும் இன்று சனிக்கிழமை  29 வயதுடைய நபர் ஒருவரும் ஐஸ் ரக போதைப் பொருளுடன் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பெல்கஹதன்ன, வராதொல, மீரியபெத்த, பினல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 29, 25, 34, 20, 18,18 வயதுகளை உடைய நபர்கள் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட 8 சந்தேக நபர்களையும் இன்று பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.