கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரஷ்ய தம்பதியினர் கைது

ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ரஷ்ய தம்பதியரை பொம்மை கைத்துப்பாக்கிகள் என நம்பப்படும் இரண்டு சாதனங்கள் காரணமாக விமான நிலைய பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

பாதுகாப்பு சோதனையின் போது ஸ்கேனர்கள் மூலம் துப்பாக்கிகள் கண்டறியப்பட்டுள்ளன.

குறித்த கைத்துப்பாக்கிகளின் பீப்பாய் உலோகத்தால் செய்யப்பட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் இன்று வியாழக்கிழமை கொழும்பு களப்படை தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

தமது 9 வயது மகனுடன் கொழும்பில் வசித்து வரும் குறித்த ரஷ்ய தம்பதியினர், ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து தகவல் தொழில்நுட்ப வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.