தொல்பொருட்களை விற்பனை செய்ய முயற்சித்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி உட்பட மூவர் கைது

புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களை விற்பனை செய்ய முயற்சித்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மற்றும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை ஹோட்டல் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் குறித்த தொல்பொருட்களை கிட்டத்தட்ட 03 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது

சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.