250 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்-

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 250 போதை வில்லைகளுடன் (25 காட்) சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.