வாள்களுடன் ஒருவர் கைது

சுன்னாகம்-ஏழாலை தெற்கு மயிலாங்காடு பிரதேசத்தில் இருந்து 43 வயதுடைய நபர் ஒருவர் இரண்டு வாள்களுடன் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் இந்த கைதினை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.