விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : வெளிநாட்டு பெண்கள் கைது

கொள்ளுப்பிட்டியில் உள்ள விபச்சார விடுதியொன்றை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் சுற்றிவளைத்து அங்கிருந்த வெளிநாட்டு பெண்களை கைது செய்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 30, 35 மற்றும் 38 வயதுடைய வெளிநாட்டுப் பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.