சுற்றுலா விசாவில் மலேசியாவில் பணியாற்ற முயன்ற 9 பேர் கைது

சுற்றுலா விசாவில் மலேசியா சென்ற 9 பேரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலைய பிரிவு அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

14 பேர் அண்மையில் மலேசியாவுக்குச் சென்றுள்ளதாகவும், அவர்களில் ஒன்பது பேர் சுற்றுலா விசாவில் மலேசியாவில் பணியாற்ற முயற்சித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் மூலமாக வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் வியாபாரிகளை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.