சட்டவிரோதமாக மரங்களைக் கொண்டு சென்றவர் கைது

 

-யாழ் நிருபர்-

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக வேப்பமர குற்றிகளைக் கொண்டு சென்றவர் நேற்று வெள்ளிக்கிழமை கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் சந்தியில் வைத்து கோப்பாய் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, வேப்பமரக்குற்றிகளை ஏற்றி வந்த வாகனமும், வேப்பமரக் குற்றிகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவிக்கின்றனர்.