உலக கிண்ண காற்பாந்தாட்ட தொடரில் ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 02க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளது.
இந்த போட்டியில் லியோனல் மெஸ்ஸி உலகக் கிண்ணத் தொடர்களில் தனது 17 ஆவது கோலை பதிவு செய்ததன் மூலம், ஆண்களுக்கான உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்ததுடன், ஜெர்மனி அணியின் முன்கள வீரர் மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
அதேநேரம் நோர்வே மற்றும் செனகல் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 03க்கு 02 என்ற கோல் கணக்கில் நோர்வே அணி வெற்றிப்பெற்றுள்ளது.
அத்துடன் ஈரான் அணிக்கு எதிரான மற்றுமொரு போட்டியில் பிரான்ஸ் அணி 03க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளது.