பேருந்துடன் டிப்பர் மோதி பாரிய விபத்து

வவுனியா கனகராஜன்குளம் பகுதியில்  இன்று வியாழக்கிழமை அதிகாலை பேருந்து மற்றும் டிப்பர் மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் 15 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தும், மாங்குளத்திலிருந்து கனகராயன்குளம் நோக்கி சென்ற டிப்பரும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் டிப்பர் சாரதி உட்பட காயமடைந்தோர் மாங்குளம் வைத்தியசாலையிலும், வவுனியா வைத்தியசாலையிலும், கிளிநொச்சி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராஜன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.