
இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்
நாட்டில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விவசாயிகளுக்கே எலிக்காய்ச்சல் அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் விவசாயிகள் அவதானமாக செயற்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் காரணமாக தசைகளில் கடுமையான வலி, கண் விழி சிவப்பு நிறம் அடைதல், சிறுநீர் வெளியேற்றம் குறைவடைதல், சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல் போன்றவை எலிக்காய்ச்சலின் அறிகுறியாகும்.
எனவே, எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய சிக்கிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், கொதித்தாறிய நீரையே பருக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
