
சோகத்தில் முடிந்த சாகச முயற்சி
தாய்லாந்தின் பட்டயா (Pattaya) கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள சொகுசு விடுதியிலிருந்த பேஸ் ஜம்பிங் (Base Jumping) விளையாட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் 29 மாடி கட்டடத்தில் இருந்து பேஸ் ஜம்பிங் செய்தபோது துரதிஷ்டவசமாக அவரது பெரசூட் செயலிழந்து, குறித்த நபர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
